சரசரவென அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

349

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 233 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 345 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 36 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 715 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 28 ஆயிரத்து 857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.