300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை

268

சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகன், அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கிருந்த 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 25 அடி ஆழத்தில் சிக்கினான்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உள்ளூர் பேரிடர் மேலாண்மை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரை வரவழைத்தனர்.

ராணுவம் மற்றும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி 40 நிமிடங்களில் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.