இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

283

இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.எலக்ட்ரானிஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி விரிவாக்கம், மின்சார வாகன தயாரிப்பு குறித்த திட்டங்களுடன் பிரதமர் மோடி ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் லியு-வை சந்தித்தார். இதனையடுத்து, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளுடனும் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரபிரதேசத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 3 மையங்களை வைத்து Apple, Xiaomi மற்றும் பிற எலக்ட்ரானின் brand-களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடதக்கது