என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

228

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிரித்து வருகிறது.

குறிப்பாக, பண்டிட்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரின் சோபூர் மாவட்டம் பனிபுரா பகுதியில் உள்ள காட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை ஈடுபட்டனர்.

அப்போது, நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் இரண்டு பேர் சட்டுக்கொல்ப்பட்டனர். 

மேலும் சில பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடியதால், அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.