“தேவையானது கையில இருக்கு”

213
Minister-Senthil-Balaji
Advertisement

தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பில் உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும், மழை காரணமாகவே கடந்த 2 நாட்களாக மின் நுகர்வு குறைந்துள்ளதாகவும் கூறினார்.

இனி வரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதை தடுத்து, உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு அளிக்க திட்டம் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என்று கூறினார்.