போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிப்பு

399

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

75வது ஆண்டு சுதந்திரத்தைக் குறிக்கும் அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பாக, போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், நாடு முழுவதும் 14 இடங்களில், 42 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட உள்ளது.

கவுகாத்தி, லக்னோ, மும்பை, முந்த்ரா, கண்ட்லா, பாட்னா, சிலிகுரி உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருட்கள் அழிக்கப்பட உள்ளது.

இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.