அதிகரிக்கும் கொரோனா – கவனம் தேவை

218
corona
Advertisement

இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 27 ஆயிரத்து 199 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 549  பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 87 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு மேலும் 33 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 15 ஆயிரத்து 647 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.