Advertisement

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது புதிய லஞ்ச வழக்கு பதிவு செய்து  சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி, பாட்னா, பீகார், உள்ளிட்ட இடங்களில் லாலுபிரசாத் யாவுக்கு தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர்.

பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது.