Advertisement

வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7 லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் மீட்பு பணிகளில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளன.