OPS, EPS நேருக்கு நேர் மோதல்! இரட்டை இலை சின்னம் யாருக்கு…..

173
Advertisement

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளும் களமிறங்குவதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும், அது அதிமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறும் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், சுயேட்சை சின்னம் வழங்கப்படுவதால் அதிமுகவுக்கு பாதிப்பு இருக்காது என்று அடித்துச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் கலை.

இதற்கு ஆதாரமாக, ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தில் நின்றபோதே தோற்றிருக்கிறார். சேவல் சின்னத்தில் நின்றபோது ஜெயித்திருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உதயசூரியன், இரட்டை ஆகிய சின்னங்கள் களத்தில் இருந்தபோதும் குக்கர் சின்னத்தில் நின்று வென்றார் டிடிவி தினகரன் என்று சுட்டிக்காட்டுகிறார் கலை.