முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

273

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து, முழுமையாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

10ஆம் வகுப்புக்கு 39 சதவீதமும், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும், 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரையும் பாடங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கு வரும் 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கு வரும் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.