சென்னையில் நாளை மலர்கண்காட்சியை முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்

279

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி நாளை கருணாநிதியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

அதனை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் ஜூன் 5ஆம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனே உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வகைகளில் அழகிய மலர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.