Monday, January 20, 2025

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 15-க்கு விற்பனை..!!

கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தக்காளி விலை 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து வருவதை தொடா்ந்து தக்காளி அறுவடையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாள்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது கிலோவுக்கு 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி நேற்று நிலவரப்படி ஒரு கிலோ முதல் தர தக்காளி 30 ரூபாய்க்கும், இரண்டாம் தர தக்காளி ஒரு கிலோ 25-ரூபாய்க்கும், மூன்றாம் தர தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் 40 ரூபாய்வரை விற்பனையானது.

Latest news