கேப்டனுக்கு தகுதி இல்லாத ரோஹித் பாகிஸ்தான் ஜாம்பவான் கருத்து  

243
Advertisement

ரோஹித் சர்மா இந்திய கேப்டனாக, நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்கமாட்டார் என்று முன்னால் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் காட்டமாகக் கூறியுள்ளார், இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் 

 அணிகளுக்கு எதிராக ஆடிய இரு ஆட்டங்களிலும், 21 மற்றும் 12 ரன்களை எடுத்திருந்தார், மேலும் முன்னதாக சில போட்டிகளில் அவரின் சிறப்பான ஆட்டதைப்  வெளிப்படுத்தவில்லை, ரோஹித் ஒரு தல சிறந்த தொடக்க ஆட்டகாரர், எனவே அவரின் சிறப்பான ஆட்டம்  இந்திய அணிக்குத் தேவை என்று கூறினார்.

மேலும் ரோஹித் ரோகித் சர்மாவின் உடல் பாவனைகளைப் பற்றிப் பேசிய அவர், ஹாங் காங் எதிராக டாஸ் போடுவதற்கு வந்த போதே மிகவும் பலவீனமாகவும், குழப்பமாகவும் தெரிந்தார். மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடும் ரோகித் சர்மாவை இதற்கு முன் நான் இப்படிப் பார்த்தது இல்லை. கேப்டன் பொறுப்பு அவருக்கு அதிகமாக அழுத்தங்களைக் கொடுத்துள்ளது என நான் நினைக்கிறேன் , அவர் பல கஷ்டங்களைச் சந்திக்கிறார். அவரது பார்ம் குறைந்துள்ளது. அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை. அவரது சிறப்பான ஆட்டத்தை நாம் காண முடியவில்லை. இந்தியாவின் கேப்டன் பொறுப்பு அவருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கிறது. அவர் கிரிக்கெட்டை பற்றி நிறையக் கூறுகிறார், நேர்மறை எண்ணத்துடன் விளையாடும் அவரிடம் , உடல் அசைவுகளில் அதைக் காண முடியவில்லை. பேசுவது எளிது, ஆனால் செய்வது கடினம். இது என்னுடைய கணிப்பு அல்ல, இனி வரும் காலங்களில் அவர் தொடர்ந்து அணியை வழிநடத்துவது கடினமாக இருக்கும். அவரால் நீண்ட காலம் கேப்டன் பொறுப்பில் இருக்க முடியாமல் போகலாம். அவருக்காக நான் வருந்துகிறேன். இந்த விஷயத்தில் அவரோ அல்லது இந்தியக் குழு முடிவு செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார் .