மண்ணில் புரண்டு அடம்பிடிக்கும் தாயை இழந்த யானைக்குட்டி 

236
Advertisement

யானைகள் உருவத்தில் பெரிதாக இருந்தாலும்,அவைகள் ஒரு குழந்தைபோல் தான் தன் உரிமையாளரிடம் பாசத்தை வெளிப்படுத்தும். இந்நிலையில் தாயை இழந்த குட்டியானையை மற்ற யானைகள் அரவணைக்கும் தருணம் அனைவரையும் ஈர்த்துவருகிறது.

ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை,அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோவில் தன் தாயை இழந்த  குட்டி யானை “கெரியோ” மண்ணில் புரண்டு மனிதனைப்போலவே தன் கால்களை அசைத்து அடம்பிடிப்பது போல உள்ளது.

இதை கவனிக்கும் தாயை இழந்த மாற்ற இரு குட்டி யானைகள் கெரியோவை சமாதானம் செய்கிறது.ஆனால்  கெரியோ தொடர்ந்து அடம்பிடிக்கிறது.இதையடுத்து மற்ற இரன்டு குட்டி யானைகளும் தொடர்ந்து   கெரியோ வை சமாதானம் செய்து அரவனைத்துஉள்ளது என பகிர்ந்துள்ளனர்.