உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதீத ராணுவ நடவடிக்கையில் கடந்த 14 நாட்களில் அந்நாடே உருக்குலைந்து போயுள்ளது.போர் உக்கிரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், உயிருக்குப்
பயந்து நாட்டை விட்டு, லட்சக்கணக்கானோர் வெளியேறி
வருகின்றனர். போர் தொடங்கி, 14-வது நாளான இன்று வரை, 21 லட்சத்து
13 ஆயிரம் பேர் அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்
உள்நாட்டிலேயே, போர்ப் பகுதியில் இருந்து பாதுகாப்பான
பகுதிக்கு 1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகள்
ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.அண்மைக்கால உலக வரலாற்றில், இவ்வளவு பெரிய
அளவிலான அகதிகள் வெளியேற்றம் இதுவே என்பது
குறிப்பிடத்தக்கது