14 நாட்களில் 21 லட்சம் பேர் தப்பிய உண்மை நிகழ்வு

261
Advertisement

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதீத ராணுவ நடவடிக்கையில் கடந்த 14 நாட்களில் அந்நாடே உருக்குலைந்து போயுள்ளது.போர் உக்கிரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், உயிருக்குப்
பயந்து நாட்டை விட்டு, லட்சக்கணக்கானோர் வெளியேறி
வருகின்றனர். போர் தொடங்கி, 14-வது நாளான இன்று வரை, 21 லட்சத்து
13 ஆயிரம் பேர் அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்

உள்நாட்டிலேயே, போர்ப் பகுதியில் இருந்து பாதுகாப்பான
பகுதிக்கு 1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகள்
ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.அண்மைக்கால உலக வரலாற்றில், இவ்வளவு பெரிய
அளவிலான அகதிகள் வெளியேற்றம் இதுவே என்பது
குறிப்பிடத்தக்கது