கண்ணிமைக்கும் நேரத்தில் நேரத்தில் மோதிய “புலி”

224
Advertisement

வனப்பகுதியில் வாகனங்களை ஓட்டும் பொது ,கவனமாக செல்லவேண்டும்.வாகனங்கள் வருவது தெரியாமல் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனத்தில் மோதி இறக்க நேரிடும்.சில நேரங்களில் மனிதர்களுக்கும் அது ஆபத்தாகிவிடும்.

இந்நிலையில், மலேசியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் புலி ஒன்று வாகனத்தில் மோதிய  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,சாலையில் வேகமாக வாகனம்  ஒன்று செல்கிறது.ஒருகட்டத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் புலி ஒன்று வனப்பகுதியாக உள்ள சாலையின் ஒருபுறத்தில் இருந்து , மறுபுறத்தை வேகமாக கடக்கிறது.

எதிர்பாராத இந்த சம்பவத்தில் கார் வேகமாக புலின் மீது மோதியது.இதில் சிறிது  தூரம் சாலையில் உரசியபடி  சென்ற புலி காட்டிற்குள் சென்றது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.