குஜராத் அரசை கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் போராட்டம்

243

குஜராத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு உதவித்தொகை வழங்காத குஜராத் அரசை கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் அவிழ்த்துவிட்டு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவித் தொகை வழங்கப்படும் என குஜராத் அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. ஆனால், உதவித்தொகை வழங்கப்படாததால், பசுக்கள் காப்பகங்களை சேர்ந்த அறங்காவலர்கள், பசுகளை சாலைகளில் அவிழ்த்துவிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆயிரக்கணக்கான பசுக்கள் சாலைகளில் ஓடியதால், வடக்கு குஜராத் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தங்களது கோரிக்கைகளை குஜராத் அரசு நிறைவேற்றாவிட்டால், அரசு அலுவலகத்திற்குள் பசுக்களை அவிழ்த்து விடுவோம் என எச்சரித்துள்ளனர்.