அதிமுக-வில் இணையும் திமுக-வின் முக்கிய புள்ளிகள்?முன்னாள் அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

115
Advertisement

சமீபத்தில் அதிமுக-வின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது அதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர்-ன் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் பொன்விழா 11 மே அதாவது நேற்றைய தினம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது என்னவன்றால்..

தமிழ்நாடு அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் பால்வளத்துறை அமைச்சருக்கு பால் ஊற்றிவிட்டனர் என்றும்  திமுக ஆட்சி பொறுப்பேற்ற பொழுது ptr பொருளாதார வல்லுநர் இல்லை என்றும் அவர் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர் என்றும் கூறினார்கள் இப்போது அவருக்கு அறிவும் ஆற்றலும் இல்லையா? என பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர் 30 ஆயிரம் கோடி ஊழல் என்று வெளியான ஆடியோ உண்மையாக தான் இருக்கும் என்று இதனால் அமைச்சர்கள் பொறுப்பு அண்மையில் மாற்றப்பட்டது , பொறுப்பு மாற்றப்பட்ட அமைச்சர்கள் ptr  மற்றும் ஆவடி நாசர் ஆகியோர் அதிமுக-விற்கு அழைக்கப்படவில்லை ஆனால் வந்தால் அங்கீகரிப்போம் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.