துணையாக வாழ்ந்த பெண்ணை துண்டுத் துண்டாக வெட்டி சமைத்த கொடூரம்….

201
Advertisement

திருமணம் செய்யாது இணைந்து வாழ்ந்த சரஸ்வதி வைத்யா என்ற பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பாத்திரத்தில் அடைத்து சமையல் அறையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் மும்பையில் பதிவாகியுள்ளது.

சந்தேகநபர் உடலின் சில பகுதிகளை சந்தித்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கீதா நகர் கூட்டுறவு குடியிருப்பில் அமைந்திருக்கும் வீட்டு இலக்கம் 704 இல் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 56 வயதான சஹானி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹானி, துர்நாற்றம் பரவுவதைத் தடுக்க, உடல் துண்டுகளில் எண்ணெய் தடவியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் உடலை 20க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டியுள்ளதாகவும் பதிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில், “சமையலறை பகுதியில் இருந்து சில உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் ஆய்வுக்காக மும்பையில் உள்ள ஜேஜே வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என மீரா-பயந்தர் வசாய் விரார் துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணத்தை போலீசார் தேடி வருகின்றனர். சந்தேகநபர் உடலை வெட்டுவதற்கு மின்சார கட்டரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இருவரும் 2014ஆம் ஆண்டு சந்தித்துக் கொண்டதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்பிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சஹானி இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை) மற்றும் 201 (ஆதாரங்களை அழித்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது, அவரைத் தடுத்து வைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்பு இடம்பெற்றது