மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியை மறுசீரமைக்கும் அதானி குழுமம்

476

மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 69 கோடி ரூபாய்க்கான டெண்டரை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மும்பையின் தாராவி கருதப்படுகிறது. சுமார் 300 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள தாராவி குடிசைப்பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ள தாராவியை மறுசீரமைக்க மராட்டிய அரசு கடந்த 15 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. கடந்த 2019ல் இதற்கென அறிவிக்கப்பட்ட ஏலம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், தாராவி பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.