மெரினாவில் திடீர் பரபரப்பு!! மர்ம நபர்களால் இளைஞர் அடித்துக்கொலை..!

175
Advertisement

சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி நேரில் வந்து பார்த்த போலீசார், ஒருவர் இறந்துகிடந்தது, மற்ற இருவர் படுகாயங்களுடன் காணப்பட்டது தெரியவந்தது.

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. நண்பர்களுடன் கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட வந்த போது, மெரினாவில் கடையில் திருட வந்ததாக நினைத்து கடை ஊழியர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.