அதிகரித்த வரும் கொரோனா அச்சத்தில் மக்கள்

213

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்து 500க்கும் மேல் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் ஆயிரத்து 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 46 லட்சத்து 9 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 3 ஆயிரத்து 884 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 24  பேர்  உயிரிழந்ததால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.  நாடுமுழுவதும் 29 ஆயிரத்து 251 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.