மழைக்கு பயந்து தாயிடம் ஒண்டிக்கொள்ளும் குட்டி யானை

197
Advertisement

எந்த உயிரினமாகட்டும் தாய்க்கு ஈடாக அரவணைக்கும் ஓர் ஜீவன் இல்லை இவ்வுலகில்.இதனை நிரூபிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .

ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு  பகிர்ந்த இந்த வீடியோவில், தாய் யானை ஒன்று தன்  குட்டியை மழையிலிருந்து பாதுகாக்கிறது. நீலகிரில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் மலைச்சாலையில் தன் குட்டியுடன் யானை ஒன்று சுற்றித்திரிந்த நேரத்தில் மழை பெய்கிறது.

அப்போது, மழையில் நனைந்த  குட்டியை தன்  உடலால் அரவணைத்து, மழை நீர் தன் குழந்தையின் மேல் படாமல் பாதுகாக்கிறது.தாயின் அன்பை குறிப்பிட்டு உணர்ச்சிப்பூர்வமாக இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு .