நடிகை கங்கனாவின் ரியாலிட்டி ஷோ ‘லாக்அப்’ ஒளிபரப்பு தள்ளிவைப்பு

485
Advertisement

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முதல் முறையாக ‘லாக்அப்’ என்ற ரியாலிட்டி ஷோ நடத்த ஒப்பந்தமாகி இருந்தார். அந்த ரியாலிட்டி ஷோ ஒடிடி தளங்களில் வெளியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி இம்மாத இறுதியில் ஒளிபரப்புவதாக இருந்தது.ஆனால் அதை ஒளிபரப்பமுடியாத வகையில் சட்டசிக்கலில் மாட்டியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த சனோபர் பாக் என்பவர் லாக்அப் நிகழ்ச்சி தொடர்பாக ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார் . அதில் எனது ஐடியாவை திருடி லாக்அப் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 2018ம் ஆண்டே இந்த நிகழ்ச்சி தொடர்பாக சிறை என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், தனது ஐடியாவை எண்டோமல் சைன் நிறுவனத்தின் அபிஷேக் என்பவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் சனோபர் கோர்ட்டில் தெரிவித்தார்.

இவ்வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்த போது சனோபர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த கோர்ட் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.