மகாராஷ்டிராவில் ஞானேஸ்வர் என்பவருக்கு வங்கி அக்கவுண்டில் ரூ.15 லட்சம் கிரேடிட் ஆனதாக மெசேஜ் வந்தது .அவர் அந்த பணத்தை பிரதமர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தனது வங்கி கணக்கில் செலுத்திவிட்டதாக நினைத்து 9 லட்சத்துக்கு வீடு கட்டியுள்ளார் . பின்னர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதமும் எழுதியுள்ளார் ., 6 மாததுக்கு பிறகு வங்கியில் இருந்து வந்த நோட்டீஸில் `உங்களது அக்கவுன்டில் தவறுதலாக ரூ.15 லட்சம் போடப்பட்டு விட்டது. அதை உடனே திரும்ப செலுத்துங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது ஞானேஷ்வர் “பிரதமர் சொன்னபடி ரூ.15 லட்சம் அனுப்பி இருப்பதாக நினைத்துத்தான் அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்ததாகவும் . பாக்கி பணம் ரூ.6 லட்சத்தை திரும்ப வங்கிக்கு கொடுத்துவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.வங்கி அதிகாரிகள் தற்போது கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்
பிரதமர் மோடி சொன்ன 15 லட்சம்…வாங்கிய நபர் …மகாராஷ்டிராவில் ருசிகரம்
Advertisement