5ஜி சேவையை பகிர இந்தியா தயார் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

267

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான 5ஜி சேவையை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடிய அவரிடம், பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5ஜி சேவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி, குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார் என்றும், 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்து விடும் எனவும் தெரிவித்தார். இந்தியாவில் தொடங்கப்பட்ட 5ஜி சேவை முற்றிலும் தனித்துவம் மிக்கது என்றும் இதற்கான சில பாகங்கள், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் எனவும் கூறினார்.  எனவே 5ஜி தொழில்நுட்பம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல.

தங்களது சொந்த தயாரிப்பு என்றும், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். வேறு நாடுகள் விரும்பினால், அவற்றுடன் 5ஜி சேவையை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.