வானைத்தொடும் தென்னை மரம் மீது சிறு கயிறு கூட இல்லாமல் ஏறி அசத்திய  விவசாயி 

302
Advertisement

தென்னை மரம் ஏறுவது அவ்வளவு எளிதல்ல.மரம் ஏறுவதற்கான சில உபகாரணம்கள் உள்ளது.வெறும் கை கால்களை வைத்து ஏறுவது கடினமான ஒன்று.ஆனால் இது விவசாயிகளுக்கு பொருந்தாது.

அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் இது போன்ற மரங்களில் ஏறுவது வழக்கமான ஒன்று.இந்நிலையில் , ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரேம் பிரகாஷ் மீனா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில்  விவசாயி ஒருவர் , கீழே இருந்து பார்க்கும்போது வானை தொடுவது போல இருக்கும் தென்னை மரத்தின் மீது எந்த உபகரணங்களும் இல்லாமல் தரையில் நடப்பது போல அசால்ட்டாக மேலே ஏறி இளநீரை பறித்துக்கீழே போடுகிறார்.

இந்த வீடியோவுடன் , ” வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது, தொடர்ந்து உழையுங்கள், நிச்சயம் பலன் கிடைக்கும்” என்று எழுதியுள்ளார்  அந்த அதிகாரி.