கனமழையால் சேதமடைந்த விவசாய நிலங்கள் சோகத்தில் விவசாயிகள்

223

திருவாரூரில், கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கானூர், கல்லுகுடி, தென் ஓடாச்சேரி, பாலியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

இதனால், கவலையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், காணூர் பாசன வாய்க்கால் தூர்வாரப்படாததே காரணம் என புகார் தெரிவித்துள்ளனர்.