சத்தீஸ்கரின்  ‘டீசல் குளம்’   அலைமோதிய மக்கள்

210
Advertisement

பெட்ரோல், டீசல் விற்கிறவிலைக்கு “குளம்” போல டீசல் என்கையாச்சும் ஓடினா..   நீங்க என்ன பண்ணுவீங்க ?  இதேபோன்ற காட்சி சத்தீஸ்கரில் காணப்பட்டது.சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள கீதம் காவல் நிலையப் பகுதியில்  டீசல் நிரப்பப்பட்ட டேங்கர்  லாரி ஒன்று கவிழ்ந்தது.

லாரி எதிரே வந்த இருசக்கர வாகனத்தினால் நிலைதடுமாறி லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் தண்ணீர் போல , அருகே  இருந்த தாழ்வான நிலப்பரப்பை நோக்கி ஓட ஆரம்பித்தது.

அதை பார்ப்பதற்கே, குளம், குட்டை  போல காட்சியளிக்கும் விதம் உள்ளது.இதையடுத்து அப்பகுதி மக்கள் கேன் , பாத்திரங்களை கொண்டுவந்து தண்ணீர் போல் ஓடும் டீசலை நிரப்பி சென்றனர்.இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுனர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.