தினசரி அளவில் குறைந்துள்ள கொரோனா

259

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும் புதிதாக  ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 654 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 8  பேர்  உயிரிழந்ததால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.  நாடுமுழுவதும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 374 ஆக குறைந்துள்ளது.