முதல்வர் பாக்கெட்டிலிருந்து பேனாவை எடுத்த குழந்தை – வைரலாகும் வீடியோ

270
Advertisement

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் முதல்வர் என்று அழைக்கப்படுகிறார்.மக்களுக்கான பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை கொண்டுவந்ததன் மூலம் மக்கள் மனதில் நின்ற ஒரு முதல்வராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவின் பல்வேறு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, மக்களை சந்தித்து வருகிறார் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்ட.இதற்கிடையில் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களை சந்தித்து பேசிக்கொண்டு இருந்த பொது அங்கிருந்த ஒரு 8 மாத குழந்தையை கையில் தூக்கிவைத்துள்ளார்.

அப்போது அந்த குழந்தை முதல்வரின் பாக்கெட்டில் இருக்கும் பேனாவை எடுக்க பல முறை முயற்சிக்கிறது.ஒருகட்டத்தில் அந்த பேனா கீழே விழுந்துவிட,அந்த பேனாவை எடுத்து அந்த குழந்தையிடமே கொடுத்துவிடுகிறார் முதல்வர்.இந்த வீடியோ தற்போது வைரலாகிவருவதை அடுத்து மக்கள் முதலமைச்சருக்கு சல்யூட் அடித்து வருகின்றனர்