மலைப்பாதையில் சீட் பெல்ட் போடாமல்,வெளியே வீசப்பட்ட நபர் 

202
Advertisement

வாகனம் ஓடும்போது போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் பல தருணங்களை  நாம் நேரில்  பார்க்கிறோம்.

இருப்பினும் சிலரின் அலட்சியத்தால் உடன் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளும் பாதிக்கும் நிலை தான் உள்ளது. இணையத்தில் வைரலாகிய வீடியோ ஒன்று இதனை உணர்த்தும் விதமாக உள்ளது.

அதில், சொகுசு பேருந்து ஒன்று மலைப்பாதையில் பயணிக்கிறது.ஒருகட்டத்தில்,கீழே நோக்கி வந்த அந்த பேருந்து குண்டூசி வளைவில் வேகமாக திரும்பிகிறது.திரும்பிய வேகத்தில், உள்ள இருக்கையில் அமர்ந்துருந்த ஒருவர் வெளியே வெளிப்படுகிறார்.

அதைத்தொடர்ந்து பேருந்து, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுப்பு சுவர் மீது உரசிய படி சென்று ,எதிரில் வந்த மற்றொரு வாகனத்தில் மோதி அருகே இருக்கும் பாறையில் முட்டி நின்றது.மனதை பதறவைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.