இலங்கை அதிபர் படுக்கையில் WWE விளையாடிய போராட்டக்கார்கள்

195
Advertisement

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக  நாடு முழுவதும் வன்முறை தீவிரமடைந்ததை அடுத்து,  அதிபர்   கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு குடும்பத்துடன்த்  தப்பிச் சென்றார். 

இதற்கிடையில், அதிபர் மாளிகை  போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.அதிபர் மாளிகை ஒரு சுற்றுலா தளமாக மாறியது என்றே சொல்லலாம்.இது தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.

மாளிகையிலிருந்த நீச்சல் குளம், சமயல் அறை, படுக்கை அறை என அனைத்தையும் மக்கள் அனுபவித்தனர். மேலும் புகைப்படங்கள் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த நிலையில், அதிபர் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் அமைதியாக வெளியேறினர்.

தற்போது,அதிபரின் படுக்கையில்  போராட்டக்களத்தில் இருந்த  இளைஞர்கள் சிலர் WWE  விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.