தூத்துக்குடியில் நடந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

226

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தூத்துக்குடி குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் முத்துலெட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.