447
Advertisement

சினிமாத்துறையில் 12 ஆண்டுகள் நிறைவு … சமந்தா நெகிழ்ச்சி

சினிமா துறையில் ஹீரோயின் ஆக 12 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதற்கு சமந்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விண்ணை தாண்டி வருவாயா . படத்தின் தெலுங்குப் பதிப்பு ‘ஏ மாயா சேசாவே’ என்ற பெயரில் வெளியானது. இதில் நாக சைதன்யா ஹீரோவாகவும் மற்றும் சமந்தா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இதுவே சமந்தாவுக்கு முதல் படமாகும்
நேற்றுடன் திரைத்துறைக்கு சமந்தா நாயகியாக அறிமுகமாகி 12 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இது தொடர்பான மகிழ்ச்சியைத் சமூகவலைத்தளத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், ‘லைட்ஸ் கேமரா ஆக்‌ஷன்’ என்ற வார்த்தைகளைச் சுற்றியும், ஒப்பற்ற தருணங்களைச் சுற்றியுமே இந்த 12 வருட நினைவுகள் அமைந்துள்ளன. ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பயணத்தில் இருப்பதிலும், உலகில் மிகச் சிறந்த, விஸ்வாசமான ரசிகர்களைப் பெற்றதாலும் நன்றியுணர்வு நிறைந்து நிற்கிறேன்” என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் அவரது திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சமத்தா அதை சட்டைசெய்யாமல் புஷ்பா படத்தின் மெகா வெற்றியின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் .