ஒரே ஆட்டோவில் 27 பேர் – அதிர்ந்துபோன காவலர்கள்

195
Advertisement

ஒரே வாகனத்தில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வதை நாம் பார்த்துருப்போம்.ஆபத்தை உணராமல் சிலர் இதுபோன்ற பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஒரு ஆட்டோவில் 27 பயணிகளுடன் அதிவேகமாக வந்த ஆட்டோ ரிக்‌ஷாவைக் கண்டு காவல்துறைனர் அதிர்ச்சியடைந்தனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபதேபூர் மாவட்டத்தில் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்தவர்கள் மூச்சு விடக்கூட இடம் இல்லாமல் செய்வதை கவனித்த போக்குவரத்து காவலர்கள்,அந்த ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.

பின்,உள்ளே இருந்தவர்களை வெளியேவர சொல்லி பார்த்தபோது,ஆட்டோவில் ஆறு பேர் மட்டுமே செல்ல முடியும், ஆனால் ஓட்டுநர், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 27 பேரின் உயிரைப் பணயம் வைத்து ஆட்டோவை ஒட்டி வந்தது தெரியவந்தது.இதையடுத்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.