கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

242

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. கொரோனாவால் ஏற்படும் நீண்ட நாள் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு நீண்ட கால பாதிப்புகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் ஏற்படும் சளி, இருமல், உடல் வலி உள்ளிட்ட குறுகிய கால பாதிப்புகளில் இருந்து குணமடைந்தாலும், மறதி உள்ளிட்ட நீண்ட கால பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு முடிவுகள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.