Tuesday, August 19, 2025
HTML tutorial

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தள பக்கம் முடக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசு அறிவுறுத்தல் பேரில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News