எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

235

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று கூடியதும், மக்களவையில் விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வுக்கு எதிராகவும் , அரிசி மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாததால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலைமை மாநிலங்களவையிலும் எதிரொலித்ததால் மாநிலங்களவையில் ஒத்திவைக்கப்பட்டது.