பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

291

காசியாபாத்தில் ஷஹீத் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.