துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் (73) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெகதீப் தன்கர் தற்போது குணமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.