Thursday, December 18, 2025

ஹெல்மெட் போடாமல் நடந்து சென்றதாக அபராதம் போட்ட போலீசார்

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் பகுதியை சேர்ந்தவர் சுஷில் குமார் சுக்லா. இவர் தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்காக விருந்தினர்களை அழைப்பதற்கு சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது வழியாக வாகனத்தில் வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி அவருக்கு 300 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதனால் மனமுடைந்த சுஷில் குமார் சுக்லா, இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Related News

Latest News