LPG சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார e-KYC-ஐ குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் e-KYC செய்யாவிட்டால், மானிய விலையில் கிடைக்கும் சிலிண்டரை பெறுவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான LPG சிலிண்டர்கள் வணிக நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் e-KYC நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம், LPG இணைப்பு உண்மையான பயனாளியின் பெயரில் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும். இதன் மூலம் தகுதியான நுகர்வோர் மானிய விலையில் சிலிண்டரை தொடர்ந்து பெறுவதற்கு உதவும்.
e-KYC செய்வதற்காக அதிகாரப்பூர்வ செயலிகள் அல்லது சம்பந்தப்பட்ட LPG ஏஜென்சிகளை மட்டுமே அணுக வேண்டும். OTP, PIN, வங்கி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை தொலைபேசியில் கேட்கும் நபர்களிடம் அவற்றை பகிரக்கூடாது.
மோசடி முயற்சிகளில் சிக்காமல் நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, LPG இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது e-KYC நிலையை சரிபார்த்து, தேவையான நடைமுறைகளை விரைவாக முடித்துக்கொள்வது நல்லது.
