தண்ணீரில் இந்த ஒருபொருள் போட்டு ஆவிப்பிடித்தால் போதும்!! முகம் ஜொலிப்பதை கண்கூடாக பார்க்கலாம்… 

198
Advertisement

தற்பொழுதுள்ள இளைஞர்கள் தங்களது சரும பராமரிப்பில் மிகுந்த கவனம்  செலுத்தி வருகின்றனர்.அப்படி நமது சரும அழகை  பாதுகாக்கும் வழிகளில் ஒன்றை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

வழக்கமான ஆவி பிடிக்கும்போது சருமத்துளைகள் திறந்திருப்பதால், அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கும். குறிப்பாக கரும்புள்ளிகள், கருவளையம், வெண்புள்ளிகள் பிரச்சினை உள்ளவர்கள், ஆவி பிடித்தல், முகத்தை சுத்தம் செய்வது போன்றதாகும்.

நாம் எவ்வளவு  தான் சருமத்தை கவனித்துக்கொண்டாலும் அது வறட்சியுடன் காணப்படும் அதுபோன்ற நேரங்களில்  ஆவிப்பிடிக்கலாம் அது முகத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.சில சமயங்களில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையால் நமது முகத்தில் உள்ள தோல் வறட்சியடையும். சருமத்தின் அழகை மெருகூட்ட, முகத்தின் நீர்ச்சத்து சீராக இருக்க, அவ்வப்போது ஆவி பிடிக்க வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக மாறும் என சொல்லப்படுகிறது.

ஆவி பிடிப்பதால் முகத்தில் கொலாஜன், எலாஸ்டின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக நமது முகம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும் என  சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.