உக்ரைன் விவகாரம் குறித்து சீன மற்றும் அமெரிக்க அதிபர்கள் இருவரும் ஆலோசனை!

417
Advertisement

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா, சீனா கூட்டு ஒத்துழைப்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்க, அமெரிக்கா – சீனா கூட்டாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

உலகம் அமைதியாகவோ, நிலையானதாகவோ இல்லை என்றும், தற்போது நிலவும் அமைதி மற்றும் வளர்ச்சிப் போக்கு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது என்றும் குறிப்பிட்டார்.

போர்க்களத்தில் சந்திக்கும் நிலைக்கு நாடுகள் வரக்கூடாது என்பதை, உக்ரைன் நிகழ்வுகள் காட்டுவதாகவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.