https://www.instagram.com/p/CTbm98iFHDr/?utm_source=ig_web_copy_link
இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மகளுக்குத் திருமணம் ஆகியுள்ள நிலையில்,
அவர் மீசை வைத்திருக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
இந்தப் புகைப்படத்தை ஏஆர்.ரஹமான் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எப்போதும் மீசையின்றி தோற்றமளிக்கும் இசையமைப்பாளர்
ஏஆர் ரஹ்மான் திடீரென்று மீசை வளர்த்திருப்பது
பலரது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
எதற்காக மீசை வளர்த்துள்ளார் என்னும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஜும் மீட்டிங் ஒன்றில் மீசை வைத்துள்ள தோற்றத்தில் கலந்துகொண்ட
ஏஆர்ரஹ்மான், ”எனது மீசை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
என்று கேட்டுள்ளதற்கு, ”தயவு செய்து வேண்டாம் சார்.
சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு சார்.
மீசை வேண்டாம் சார். எப்போதும் இளமையோடு இருங்க சார்.
மீசைக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம்.
தாடி வளர்க்க இதுதான் சரியான நேரம் சார்.
வாவ் என்னவொரு மாற்றம், மாஸ் தலைவா,
தமிழ்நாட்டுப் பையன் மாதிரி இருக்கீங்க.
அழகாக இருக்கிறது, என்னவொரு மாற்றம்” என்றெல்லாம் ரசிகர்கள்
தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகைப்படம் சுமார் 6 மாதங்களுக்குமுன்பு எடுக்கப்பட்டதாகும்.