தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்திக்க ஒவ்வொரு தொகுதியாக செல்ல தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்,சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது.அவரது பிரச்சாரம் செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை மக்கள் சந்திக்கவுள்ளார். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் அதாவது, மொத்தம் 14 நாட்கள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற உள்ளது .
இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மேற்கொள்ள உள்ள பிரசாரத்துக்கு அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.விஜய் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், அனுமதிகோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும்,இந்த பிரச்சாரத்திற்கு அனுமதி கோரும் மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
