Wednesday, September 10, 2025

அமித்ஷாவை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவிதித்தார். இதையடுத்து அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

பரபரப்பான இந்த சூழலில் செங்கோட்டையன் நேற்று டெல்லி சென்றார். அங்கு பாஜக மூத்த தலைவர், உள்துறை மந்திரி அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினேன். இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றிய கருத்துகள் அங்கு பரிமாறப்பட்டன. அதிமுக இயக்கம் வலுப்பெற வேண்டுமென கருத்துகளை முன்வைத்தேன் என கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News