குதிரையில்  சென்று உணவு டெலிவரி செய்யும் நிலை..

246
Advertisement

மும்பையில் மழை  காரணமாக  போக்குவரத்து நெரிசலில்  உண்வை  குதிரையில் சென்று டெலிவரி செய்யும்  நிலை உருவாகி உள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆன் லைன் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.ஆனால் அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.

எங்கு பார்த்தாலும்   வாகனங்கள் நீண்ட வரிசையாக நிற்கிறது.இதற்கிடையில், வாடிகையாளருக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவை டெலிவரி செய்யவேண்டும் என்பதால்,  குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்யும் டெலிவரி பாயின் வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மழையிலும் வாடிக்கையாளர்களை கருத்தில்கொண்டு குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் இவரின்  தொழில்பற்றை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.